Monday, October 17, 2005

ஜனாதிபதியிடமிருந்து நன்றிக் கடிதம்...

காசி அவர்கள் அவரது பதிவில் நமது ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். எனக்கும் அதே அனுபவம் தான் இருந்தது.

கடந்த வாரம் நமது தமிழ் வலைப்பதிவர் சார்பாக ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தேன் இப்போது மின்னஞ்சலை திறந்து பார்த்தால் ஜனாதிபதியிடமிருந்து நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல். ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதோ அதன் பிரதி உங்களுக்காக.

7 Comments:

Blogger மதுமிதா said...

தமிழ் மண நட்சத்திற்கு
இந்திய முதல் நட்சத்திரமிடமிருந்து
வாழ்த்து கிடைத்ததற்கு
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் சுரேஷ்

தொடர்ந்து ஒளிருங்கள் நட்சத்திரமே

October 17, 2005 2:10 pm  
Blogger மதுமிதா said...

சுரேஷ்பாபு
இன்னொரு விஷயம் உங்களுக்கு சொல்கிறேன்

எனது தந்தை இராஜபாளையத்தில் வீட்டிற்கு வந்தபோது
ஒரு குழந்தை அம்மா நம்ம வீட்டுக்கு அப்துல் கலாம் வந்திருக்கிறார் என்று சொல்ல,
பலரும் அதையே வழிமொழிய
எனது தந்தை இப்போது இராஜபாளைய அப்துல்கலாம் என்றே அழைக்கப்படுகிறார்.

October 17, 2005 2:40 pm  
Blogger பழூர் கார்த்தி said...

வாழ்த்துக்கள் சுரேஷ், கலக்குங்கள் :-)

குடியரசு தலைவர் அனுப்பிய கடிதப் படத்தை திறந்தால் சிறியதாக இருப்பதால் படிக்க முடியவில்லை, எனது மின்னஞ்சலுக்கு forward செய்ய முடியுமா :-) நேரமிருந்தால்
swami.plr@gmail.com

October 17, 2005 3:58 pm  
Blogger Pot"tea" kadai said...

குடியரசுத் தலைவரிடம் இருந்து நன்றிக் கடிதம்!!!
பார்த்த மாத்திரத்தில் பரவசம்...ம்...ம்...சகோ, நடத்துங்க!!!

சத்யா

October 17, 2005 9:24 pm  
Blogger Suresh said...

மதுமிதா, ஜோதி, சத்யா
வாழ்த்துக்களுக்கு நன்றி...

ஜோதி, உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டேன்.

October 17, 2005 10:07 pm  
Blogger ஜோ/Joe said...

அங்கே கொஞ்சம் பேர் பதில் வரல்லின்னு புலம்பிகிட்டிருக்காங்க..ஒரு வேளை அப்துல் கலாம் ஐயா நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் பதில் அனுப்புவாரோ?

October 18, 2005 4:02 am  
Blogger Suresh said...

:-)) நன்றி ஜோ !!

October 18, 2005 12:01 pm  

Post a Comment

<< Home