Friday, September 09, 2005

இங்கேயே !! இப்பொழுதே !! - Part 9

எப்போதாவது மனம் நிலையில்லாமல் தவிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது மனம் மற்றொன்றை நினைத்து அலை பாய்ந்து கொண்டிருக்கும். சரியென்று அந்த மற்றொரு வேலையை செய்ய ஆரம்பித்தால் வேறொன்றை நினைத்து அலை பாயும்.அப்போது அந்த கணத்தில் செய்து கொண்டிருக்கும் வேலையில் முழு கவனமும் செலுத்த முடியாமையில் மனம் தடுமாறும்...

பெரும்பாலான சமயங்களில் நமது மனத்திற்கு குரங்கு என்று பெயரிட்டு அதை அப்படியே அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்டு அதனுடன் வாழ பழகிவிட்டோம். (அப்படியே சக மனிதர்களையும் அவர்களுடைய குறை நிறைகளோடு ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?!!!)

'இங்கே இப்போது' என்பது தான் நிஜம். 'here and now ' என்று ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது. அதை சரியாக புரிந்து கொண்டு எத்தனை பேர் வாழ்க்கையை சரியாக வாழ்க்கற்றுக்கொண்டிருக்கிறோம்.

சுவாமி சுகபோதானந்தா கூறியிருப்பார்.
'நேற்று என்பது வரலாறு. நாளை என்பது கணிக்க முடியாத் தெரியாதவொரு புதிர், இன்று என்பது நமக்கு கொடுக்கப்பட்ட பரிசு. அதற்காகத்தான் இதை ஆங்கிலத்தில் PRESENT என்று கூறுகிறார்கள் என்று. அது எவ்வளவு நிஜம் !!!

ஜக்கி வாசுதேவ் சொன்னது போல்,

'ஓய்வாக இருந்தபோது, வேலை கிடைக்காதா என்று ஏங்கினீர்கள். கிடைத்தவுடன் சந்தோஷத்தையெல்லாம் இழந்து, படபடப்புடன் ரத்த அழுத்த நோயை வரவழைத்துக் கொள்கிறீர்கள்! பதவி உயர்வு கிடைக்கும்வரை, அதற்காகப் போராடினீர்கள். இப்போது நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் என்கிறீர்கள். இன்னும் உயரத்துக்குப் போனால், என்ன சொல்வீர்களோ? முன்னால் நிம்மதியாக இருந்தேன். இப்போது அமைதியே போயிற்று என்பீர்களா?

'வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக்கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல்!'

1 Comments:

Blogger Suresh said...

Thanks for your comments Satya..

September 10, 2005 4:24 pm  

Post a Comment

<< Home