Friday, October 14, 2005

ஜனாதிபதிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

நாளை (15/10/2005) பிறந்தநாள் காணும் நமது ஜனாதிபதிக்கு நமது வலைப்பதிவு நண்பர்கள் சார்பாக பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.



இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக !!

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்,
மாண்புமிகு ஜனாதிபதி, இந்தியா
_____________________________


சிகரத்தை அடைந்த பின்பும் தேடலைத் தொடரும் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

12 Comments:

Anonymous Anonymous said...

Hi suresh,

I also wish the same to our President.

October 14, 2005 11:53 am  
Blogger Unknown said...

போற்றத்தக்க அவசியம் போற்றப்படவேண்டிய மாமனிதர்.
நீங்கள் நீண்டநாள் வாழ விரும்புகிறோம்.
வாழ்த்துக்கள்.

October 14, 2005 12:54 pm  
Blogger Pot"tea" kadai said...

அரசியலற்ற, அனைவராலும் போற்றப்பெற்ற, வல்லரசுகளாகக் கருதப்பெற்ற நாடுகளின்ஊடகங்களில் பெரிதும் கலந்துரையாடப்பெற்ற, எளிமையான சான்ரோனான எமது குடியரசுத் தலைவர் வாழ்கப் பல்லாண்டு என வாழ்த்தி வணங்குகிறேன் !

நன்றி!
சத்யா.

October 14, 2005 2:17 pm  
Blogger Unknown said...

//சிகரத்தை அடைந்த பின்பும் தேடலைத் தொடரும் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.//

இதுவே என் வேண்டுதலும்.

October 14, 2005 3:28 pm  
Blogger தருமி said...

நமக்கும் கூட, நம் அரசியல் அரங்கத்தில் கூட இப்படி ஒரு மாமனிதன் கிடைக்க இந்தத் தலைமுறை செய்த புண்ணியம் என்னவோ?

வாழ்க அவர்; வளர்க அவர்தம் கனவுகள்.
அவைகளை நிஜமாக்கக் கொஞ்சம் முயலுவோமே!

October 14, 2005 6:54 pm  
Blogger ஜோ/Joe said...

நாங்கள் என்றும் பெருமைப்படும் அப்துல் கலாம் ஐயா நீடூடி வாழ்க!

October 14, 2005 6:54 pm  
Blogger துளசி கோபால் said...

நியூஸிலாந்து நாட்டின் வலைப்பதிவாளர்கள் சார்பாக:

நம் 'கலாம்' ஐயாவுக்கு,
எங்கள் அன்பான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நல்லா இருங்க.

October 14, 2005 7:58 pm  
Anonymous Anonymous said...

abdul kalam ungal peyarai ucharikkumpothu engal naadi narambukal ellam naattuppatraal chilirththuelukinntrana ungal"latchiya india" viraivil ninaivvakum neenda naal vaaza iraivan arulpalikkattum!

October 14, 2005 9:13 pm  
Blogger Suresh said...

செந்தில்,கல்வெட்டு,சத்யா,அப்பிடிபோடு,சதயம்,தருமி,ஜோ,துளசி,ஹமீத் அனைவருக்கும் நன்றி...

October 15, 2005 12:35 am  
Blogger மதுமிதா said...

ஜனாதிபதியின் பிறந்தநாளுக்கு நம் தமிழ்மணம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியமைக்கு
நன்றி சுரேஷ்பாபு

எப்போதும் போல் தாமதமாய்
மதுமிதா

October 17, 2005 2:15 pm  
Blogger மதுமிதா said...

கனவு காணச் சொன்ன எங்கள் கலாம்
கனவின்பலன் கைகளில் இன்றும் காணலாம்
இருபது வருடங்களில் காணலாம்
இன்னும் தொடர்ந்தும் காணலாம்

நெஞ்சில் நம்பிக்கையும் நினைவில் தெளிந்த சிந்தனையும் இருக்க

இன்றுபோல் என்றும்
சிறந்து வாழ்வீர்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

October 17, 2005 2:23 pm  
Blogger Suresh said...

தாம(த)துமிதா :-),

கவிதைக்கு நன்றி..

October 18, 2005 12:02 pm  

Post a Comment

<< Home