Thursday, December 01, 2005

பிபிசி தமிழோசையின் பாட்டொன்று கேட்டேன்

ஆஹா!! எவ்வளவு அருமையான ஒரு நிகழ்ச்சி. லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு கலந்து கொண்டவர்கள் அனைவரும் தொடர்பில் இருப்பதாக முடிவெடுத்து டுபுக்கு ஒரு யாஹூ குழுமம் ஆரம்பித்தார். அதில் ரோஹினி வெங்கடஸ்வாமி அவர்கள் 'பாட்டொன்று கேட்டேன்' பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். அறிமுகப்படுத்தியதற்கு அவருக்கு முதலில் நன்றி.

இது வரைக்கும் அறுபது பகுதிகள் வெளியாகி இருக்கின்றன. அனைத்து பகுதிகளுக்கும் சுட்டிகள் பிபிசி தமிழ் இணையத்தளத்தில் இன்றும் கேட்க கிடைக்கின்றன. இதோ சுட்டி உங்களுக்காக.

சம்பத் குமார் அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். எனக்குத்தெரிந்ததெல்லாம் இளையராஜாவிற்கு பிறகான தமிழ் திரையிசையைப்பற்றித் தான். அதற்கு முன்பான தமிழ் திரையிசை வரலாற்றினைப்பற்றிய ஒலித்தொகுப்பை இசையுடன் கேட்கும்போது ரொம்பவே மகிழ்சியாக இருந்தது. ஏன்?.. இளையராஜாவின் இசையில் வெவ்வேறு பாடகர்கள் பாடிய பாடகர்கள் பாடிய பாடல்களை சம்பத் குமார் அவர்கள் தொகுத்து வழங்குவதை கேட்கும்போது அதைப்பற்றிய பல விஷயங்கள் தெரிய வந்தன.

நிகழ்ச்சி இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. நிகழ்சியைப்பற்றி மேலும் தகவல்களை சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. நீங்களே கேட்டுப் பாருங்கள்.